Sunday 29 January 2012

don't kill yourself

               உன்னைக்  கொல்லாதே 

 கலிகால வெள்ளம் வருகையிலே ...
         நெட்டுக் குத்து மரங்களெல்லாம்
  விட்டுக்கொடுக்காமல் வீழ்ந்து விடும்
         சாய்ந்து கொடுக்கும் பசும்புல்லோ
  வாய்ப்பு பெற்று வாழ்ந்து விடும்

  சுழலும் பூமி நிற்கவில்லை இன்று
           நாளை தொடருமா தெரியவில்லை
  நிழலும் நிற்காது உனக்காக என்று
           தெரிந்துகொண்டால் பயமில்லை


   வானத்தில் பறக்கும் சக்தி பெற்றும் 
           நீரின் மேல் மிதக்கும் கருவி பெற்றும்
   ஞானத்தில் திளைக்கும் அறிவு இன்றி
           பாரின் மேல் வாழ்வது கடினமன்றோ?


   உன் கையில் எதுவும் இல்லை
            வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமில்லை
    வருகிறோம் வாழ்கிறோம் போகிறோம்
             நிலைத்து யாரும் நிற்பதில்லை

    
    வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்தால் தான்
             வாழ்வேன் என நீ சொன்னால்
    வாழும் உயிர்கள் அனைத்தையும்
             உன்னுடன் அழைத்துச் சென்றுவிடு
    
 
 
         

No comments:

Post a Comment