Friday 14 December 2012

போதும் என்ற மனமே பொன் போன்றது --  பழமொழி 

நிறைய ஆசை படு 
குறைவின்றி உழைத்து விடு -- புதுமொழி 

Wednesday 12 December 2012

en thandhai

அறுபதை தாண்டியும் ஓய்வின்றி உழைப்பவர் 
ஆலமரம் போல் நின்று எங்களை காப்பவர் 
இளமையிலேயே பல கஷ்டங்களை பார்த்தவர்
ஈர நெஞ்சுடன் பலரின் துயரைத் தீர்த்தவர் 
உழைக்கும் கரங்களை உயர்த்தி விட்டவர் 
ஊரே வியக்கும் உயரத்தைத் தொட்டவர் 
எல்லா வளமும் பெற்று விளங்கிட 
ஏற்பட்ட துன்பங்கள் விட்டு விலகிட 
ஐயனிடம் வேண்டி வாழ்த்தி வணங்க 
ஒன்றாய் கூடி நடத்தும் நிகழ்ச்சி 
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்ச்சி