Friday 14 December 2012

போதும் என்ற மனமே பொன் போன்றது --  பழமொழி 

நிறைய ஆசை படு 
குறைவின்றி உழைத்து விடு -- புதுமொழி 

Wednesday 12 December 2012

en thandhai

அறுபதை தாண்டியும் ஓய்வின்றி உழைப்பவர் 
ஆலமரம் போல் நின்று எங்களை காப்பவர் 
இளமையிலேயே பல கஷ்டங்களை பார்த்தவர்
ஈர நெஞ்சுடன் பலரின் துயரைத் தீர்த்தவர் 
உழைக்கும் கரங்களை உயர்த்தி விட்டவர் 
ஊரே வியக்கும் உயரத்தைத் தொட்டவர் 
எல்லா வளமும் பெற்று விளங்கிட 
ஏற்பட்ட துன்பங்கள் விட்டு விலகிட 
ஐயனிடம் வேண்டி வாழ்த்தி வணங்க 
ஒன்றாய் கூடி நடத்தும் நிகழ்ச்சி 
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்ச்சி 

Wednesday 15 August 2012

independence special!!


¸ßçÄÂïV«¼ª ¼Ã«D ¼Ã·D ÖÍ]B åV|
¸ßçÄÂïV«çª ïõ¦V_ À¥D #«D {|

çïçB ïVâ½¥D WuïV\_ {|m åï«© ¼ÃòÍm
çïçB Àâ¦Â í¦ Ö¦D ØïV|ÂïV\_ {|m åï«©
                                        ÃºzÍm

Awo_ c^á »w_ ØÄF> ØÃòßÄVoï^
zwo_ ÖÍ]B AïçwÝ >^ÓD ØÃòÝ>Vçéï^

»w_ ØÄFmD c^¼á ¼ÃVïV> z^áåö íâ¦D
ów_ \V®D \V¤B ¸[¼ª ¶¦ºz¼\ gâ¦D

sçéï^ ¨_éVD °¤©¼ÃVl Ö\B\çél¼é WuþÅm
s½B_ ¨©¼ÃVm kò¼\V ¨[® \Âï^ \ªm >sÂþÅm
sçéï^ ¨_éVD ¼ÃVzm Öºz s\Vª ¼kïÝ]_
»aBD \â|D °[ ¼ÃVzm ïâç¦kõ½ ¼kïÝ]_?

ØÄVÍ> Tâ禼B ØïV^çá ¶½ÂzD z½ÂïV«Ý >Íç>
ØåVÍ> \Âï^ *õ|D ¶k竼B ¼>ìÍØ>|©Ãm
                               \VØÃòD sÍç>

ÄVçéï^ ¼>V®D ¼kïÝ>ç¦ï^ ØÄBuçïBVï kò¼\
                       Ãé ÖBuçïBVï kò¼\...
\Vçéï^ ¼ÃVâ| \öBVç> ØÄFB ïVÝ]òÂzD zaï^
                       åD\ gµmçá zaï^...

妩Ãm í¦ E«\D ÃõbD å禩ÃVç> ïç¦ï^
                                     kVµÂçïçB
囹Ãm í¦ E«\D ÃõbD z½ ¼ÃVç> ïç¦ï^

ÖçkBV¡D WçÅÍ> Ö¦Ý]_ kVµÂçï å¦Ým¼ÅV¼\
¶çkl_ c^¼áVì ïõ|ØïV^áV\_ ïVçÄ ï¦ÝmÅV¼ª
                           åD\ ïVçÄ ï¦ÝmÅV¼ª!



              

Thursday 2 February 2012

uyir aasan

                       உயிர் ஆசான்

அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்ததாய் சொன்னாலும்
அறிவினைத் தருவதில் முதனிலைதான் எந்நாளும்
அளவில்லா அறிவினை நமக்கு ஊட்டுவதும்
அறிவுக்கண் திறந்து நல்வழி காட்டுவதும்

ஆழமான கல்வி தரும் ஆசிரியரே

ஆமோதிக்க மறுத்தால் வரும் பெருந்துயரே
ஆளாக்குவதில் இவரும் பங்கு கொள்வார்
ஆளுமைத் திறனுக்கு அடித்தளம் வைப்பார்

இன்று பயில்வது என்றுமே உதவும்

இடித்தால் திறக்கும் இறுகிய கதவும்
இறுகிய கதவாய் இருக்கும் நமறிவை
இடிக்கத்தான் நல்ல ஆசிரியர் தேவை

ஈரமண் தண்ணீரால் பக்குவம் அடைந்திடும்

ஈர்க்கும் ஆசிரியரால் அறிவுமண் நனைந்திடும்
ஈர்க்கும் உருவங்களை ஈரமண் பெற்றிடும்
ஈரமான அறிவுமண்ணும் அவ்வாறே சிறந்திடும்

உறவுகள் கூட உதவாத சமயம்

உதவிடும் கல்வியோ உயரத்தில் இமயம்
உன்னத கல்வியை உனக்கு கொடுப்பார்
உறங்கும் அறிவின் தூக்கத்தைக் கெடுப்பார்

ஊக்கத்துடன் கற்பிக்கும் ஆசானை பெற்றிடு

ஊரே வியக்கும் கல்வியை கற்றிடு
ஊஞ்சலாய் ஆடும் மனதினை மாற்றிடு
ஊரே வியந்திடும் உயரத்தில் ஏறிடு

எல்லா துறையிலும் அவசியம் தேவை

எல்லா காலத்திலும் செய்திடும் சேவை
எந்த பொருளும் கல்வியின்றி அமையாது
எண்ணிப்பார் ஆசானின்றி கல்வியே இருக்காது

ஏளனம் செய்யாதே கல்வியை விற்று

ஏனிந்த நிலையென நீயோசி சற்று
ஏழைகளும் கல்விபெற்று முன்னேற வேண்டும்
ஏற்றிவிட இரக்கங்கொண்ட நல்லாசான் வேண்டும்

ஐயங்களைத் தீர்த்து அறிவுதரும் குருவே

ஐயமில்லை அவனே இறைவனின் உருவே
ஐம்புலன்களை அடக்கும் புத்தியும் தருவான்
ஐம்பூதங்களை கடக்கும் சித்தியும் தருவான்

ஒன்றும் இல்லாதோருக்கு எல்லாம் தரும்

ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் வரும்
ஒருவர் பெரும் கல்வி அறிவு
ஒருபிறவி முழுதும் தரும் செறிவு

ஓடமாயிருந்து நம்மை சேர்ப்பார் கரை

ஓயமாட்டார் ஒன்றை கற்பிக்கும் வரை
ஓங்கிய கல்விக்கு எல்லையே இல்லை
ஓர் ஆசானில்லையேல் அக்கல்வியே இல்லை.

                  

uyir thandhai

                          உயிர் தந்தை 

அன்பிற்கு அன்னையெனில் அறிவிற்கு தந்தை
அனுபவ அறிவைத் தருவதில் சந்தை
அனலாய் கொதித்து மகனைத் திட்டுவார்
அதேநேரம் அளவில்லா அன்பினை காட்டுவார்

ஆதம் தொடங்கிய அழகிய உறவு

ஆழம் மிகுந்த அற்புத உணர்வு
ஆளாக்குவதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு
ஆதவனே வியக்கும் அச்செயல் கண்டு

இரவும் பகலும் அயராது உழைப்பதும்

இல்லை என்று கூறாது கொடுப்பதும்
இனிய தந்தையின் சிறந்த குணம்
இமயம் போல் உயர்ந்த மனம்

ஈரைந்து மாதங்கள் சுமக்கவில்லை என்றாலும்

ஈன்ற பிள்ளையை சுமப்பார் மனதில் எந்நாளும்
ஈர நெஞ்சமும் இறக்க குணமும்
ஈன்ற பிள்ளைக்குத் தந்தை தரும் வரமாம்.

உலகத்துக்கே தந்தை ஒளிதரும் ஆதவன்

உனக்கும் எனக்கும் நம்தந்தையே ஆதவன்
உன்னை காக்கும் உயர்ந்த சுவரே
உழைப்பையும் உயர்வையும் கற்பித்த அவரே

ஊக்கத்தையும் கொடுத்து உணவையும் கொடுத்து

ஊரே வியக்கும் கல்வியும் கொடுத்து
ஊருக்கே சொல்லி பெருமை படுவார்
ஊமை கூட உன்புகழ் பாடும்படி செய்வார்


எல்லா தேர்விலும் எளிதாம் வினாத்தாள்
எதிரே தந்தையின் உந்துதல் இருந்தால்
எதையும் ஆழமாக சிந்துத்துப் பார்ப்பார்
எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துத் தீர்ப்பார்

ஏணியாய் முன்னேற வைத்திடுவார் நம்மை

ஏமாற்றம் தாராமல் செய்திடுவார் நன்மை
ஏற்றிவிட்ட தந்தையின் ஆசியே போதும்
ஏற்பட்ட துன்பங்கள் தூசியாய் போகும்

ஐம்பதை தாண்டியும் ஓய்வு பெறாமல்

ஐம்புலனுக்கும் முழு இன்பம் தராமல்
ஐவர் குடும்பத்தில் உழைக்கும் ஒருவன்
ஐயமில்லை அவனே நமக்கு இறைவன்

ஒருவர் வாழ்வில் ஒளிமயம் ஆக

ஒருமுறை தந்தை பதவியை பெருக
ஒத்துக்கொள்வாய் அது மிக பெரிது
ஒருமுறை மட்டும் பெற்றால் நல்லது

ஓய்வுக்குப் பின்னும் ஓயாத சிந்தை

ஓரங்கட்டாதே அறிவில் தேயாத தந்தை
ஓதும் மந்திரம் எல்லாம் வீணாகிபோகும்
ஓர் தந்தையின் சொல்லே மந்திரமாகும்.

Tuesday 31 January 2012

uyir (eluthu) thaai

                உயிர் (எழுத்து) தாய்

ன்னை ஓர் ஆலயம் என்று 

அவளை போற்றிப் புகழ்வது நன்று 

அன்பு தருவதில் அட்சய பாத்திரம் 

அதுவே அவளின் தாரக மந்திரம்

 

தாமின் மனைவி தொடங்கிய உறவு

ஆண்டவனின் மனம் அடங்கிய உறவு

ஆளாக்கும் அன்பில் வெள்ளப் பேருக்கு 

ஆயினும் அவளிடம் இல்லை செருக்கு 

 

இனிமையில் தாய் அமிர்தத்தை வென்றாள்

 இதயத்தின் மையத்தில் இனிதே நின்றாள்

இரவும் பகலும் காக்கும் கண்கள் 

இனிய உறவை உருவாக்கும் பெண்கள் 



ஈ எறும்பும் அண்டாமல் காப்பாள் 

ஈன்ற பிள்ளையை இமயத்தில் சேர்ப்பாள் 

ஈரமிக்க நெஞ்சில் கங்கையே தோற்கும் 

ஈசனுக்கு நிகரென உலகமே ஏற்கும்



உரலில் உன்னைக் கட்டுவதும் அன்னை

உறங்காமல் உணவை ஊட்டுவதும் அன்னை 

உள்ளே இருந்து உதைக்கும் உன்னை

உருகும் அன்பால் வதைக்கும் அன்னை

 

 

ஊரே தன் பிள்ளையை ஏசினாலும்

ஊடகம் எல்லாம் தவறாக பேசினாலும்

ஊக்கம் பெற்றத் தாய் நம்பமாட்டாள்

ஊனமாய் பிறந்தாலும் வெறுக்க மாட்டாள்

 

எல்லா உயிர்களும் போற்றும் பாசம்

எளிதில் உலகில் கிடைக்கும்  நேசம்

எக்காரணம் கொண்டும் தாயை மறக்காதே

எல்லாரிடமும் அடிபட்டு நாயாய் இறக்காதே

 

எவனொருவன் தருவானோ தாயிற்கு முதன்மை

எதிர்வரும் பிறவிகளிலும் அவனுக்கு நன்மை

எவராலும் அடைக்க முடியாத பெருங்கடன்  

எதிர்பாராமல் நேசிக்கும் தாயின் நன்றிக்கடன்

 

ஏதுமறியா மழலையின் அழுகுரலை கேட்பாள்

ஏக்கத்தையும் வலியையும் ஒருநொடியில்   மறப்பாள்

ஏரால் உழப்பட்ட நிலத்தின் பயிராய்

ஏற்பட்ட உறவில் இருப்பாள் உயிராய்

 

ஐந்தாம் முகமாம் பிரம்மனின் உருவில்

ஐக்கியம் ஆகிவிடு அவ்வுன்னத உறவில்

ஐந்தறிவு பெற்ற விலங்கு முதல்

ஐயமில்லை உறவில் தாயே முதல்

 

ஒளிமிக்க உறவில் தாயே தோரணம்

ஒருநாள் முழுவதும் கூறலாம் காரணம்

ஒருமுறை தாயாய் இருந்தால் தெரியும்

ஒருதாயின் இன்ப துன்பங்கள் புரியும்

 

ஓரளவு இன்பம் தரும் காதல்

ஓரளவிற்கு மேல் நட்பில் மோதல்

ஓர் அன்னையிடம் காதல் நட்பு

ஓங்கி நிற்காமல் போதல் இயல்பு.  

 

 

 

 

  

 

 

   

 

mother

                              தாய்

கருவறையில் நாம் காத்திருந்த போது
கஷ்டப்பட்டு நம்மை காத்திருந்த சாது
இருட்டறையென நாம் அஞ்சியதை பார்த்து
இஷ்டப்பட்டு நம்மை அரவணைத்தால் சேர்த்து

தந்தையை யாரென சொல்வதும் அவளே

தரணியில் முதலிடம் வெல்வதும் அவளே
சிந்தை முழுவதும் வியாபித்து நின்றாயே!
சிறுவன் எனக்காக மறுமுறை பிறந்தாயே!!