Friday 14 December 2012

போதும் என்ற மனமே பொன் போன்றது --  பழமொழி 

நிறைய ஆசை படு 
குறைவின்றி உழைத்து விடு -- புதுமொழி 

Wednesday 12 December 2012

en thandhai

அறுபதை தாண்டியும் ஓய்வின்றி உழைப்பவர் 
ஆலமரம் போல் நின்று எங்களை காப்பவர் 
இளமையிலேயே பல கஷ்டங்களை பார்த்தவர்
ஈர நெஞ்சுடன் பலரின் துயரைத் தீர்த்தவர் 
உழைக்கும் கரங்களை உயர்த்தி விட்டவர் 
ஊரே வியக்கும் உயரத்தைத் தொட்டவர் 
எல்லா வளமும் பெற்று விளங்கிட 
ஏற்பட்ட துன்பங்கள் விட்டு விலகிட 
ஐயனிடம் வேண்டி வாழ்த்தி வணங்க 
ஒன்றாய் கூடி நடத்தும் நிகழ்ச்சி 
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்ச்சி 

Wednesday 15 August 2012

independence special!!


¸ßçÄÂïV«¼ª ¼Ã«D ¼Ã·D ÖÍ]B åV|
¸ßçÄÂïV«çª ïõ¦V_ À¥D #«D {|

çïçB ïVâ½¥D WuïV\_ {|m åï«© ¼ÃòÍm
çïçB Àâ¦Â í¦ Ö¦D ØïV|ÂïV\_ {|m åï«©
                                        ÃºzÍm

Awo_ c^á »w_ ØÄF> ØÃòßÄVoï^
zwo_ ÖÍ]B AïçwÝ >^ÓD ØÃòÝ>Vçéï^

»w_ ØÄFmD c^¼á ¼ÃVïV> z^áåö íâ¦D
ów_ \V®D \V¤B ¸[¼ª ¶¦ºz¼\ gâ¦D

sçéï^ ¨_éVD °¤©¼ÃVl Ö\B\çél¼é WuþÅm
s½B_ ¨©¼ÃVm kò¼\V ¨[® \Âï^ \ªm >sÂþÅm
sçéï^ ¨_éVD ¼ÃVzm Öºz s\Vª ¼kïÝ]_
»aBD \â|D °[ ¼ÃVzm ïâç¦kõ½ ¼kïÝ]_?

ØÄVÍ> Tâ禼B ØïV^çá ¶½ÂzD z½ÂïV«Ý >Íç>
ØåVÍ> \Âï^ *õ|D ¶k竼B ¼>ìÍØ>|©Ãm
                               \VØÃòD sÍç>

ÄVçéï^ ¼>V®D ¼kïÝ>ç¦ï^ ØÄBuçïBVï kò¼\
                       Ãé ÖBuçïBVï kò¼\...
\Vçéï^ ¼ÃVâ| \öBVç> ØÄFB ïVÝ]òÂzD zaï^
                       åD\ gµmçá zaï^...

妩Ãm í¦ E«\D ÃõbD å禩ÃVç> ïç¦ï^
                                     kVµÂçïçB
囹Ãm í¦ E«\D ÃõbD z½ ¼ÃVç> ïç¦ï^

ÖçkBV¡D WçÅÍ> Ö¦Ý]_ kVµÂçï å¦Ým¼ÅV¼\
¶çkl_ c^¼áVì ïõ|ØïV^áV\_ ïVçÄ ï¦ÝmÅV¼ª
                           åD\ ïVçÄ ï¦ÝmÅV¼ª!



              

Thursday 2 February 2012

uyir aasan

                       உயிர் ஆசான்

அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்ததாய் சொன்னாலும்
அறிவினைத் தருவதில் முதனிலைதான் எந்நாளும்
அளவில்லா அறிவினை நமக்கு ஊட்டுவதும்
அறிவுக்கண் திறந்து நல்வழி காட்டுவதும்

ஆழமான கல்வி தரும் ஆசிரியரே

ஆமோதிக்க மறுத்தால் வரும் பெருந்துயரே
ஆளாக்குவதில் இவரும் பங்கு கொள்வார்
ஆளுமைத் திறனுக்கு அடித்தளம் வைப்பார்

இன்று பயில்வது என்றுமே உதவும்

இடித்தால் திறக்கும் இறுகிய கதவும்
இறுகிய கதவாய் இருக்கும் நமறிவை
இடிக்கத்தான் நல்ல ஆசிரியர் தேவை

ஈரமண் தண்ணீரால் பக்குவம் அடைந்திடும்

ஈர்க்கும் ஆசிரியரால் அறிவுமண் நனைந்திடும்
ஈர்க்கும் உருவங்களை ஈரமண் பெற்றிடும்
ஈரமான அறிவுமண்ணும் அவ்வாறே சிறந்திடும்

உறவுகள் கூட உதவாத சமயம்

உதவிடும் கல்வியோ உயரத்தில் இமயம்
உன்னத கல்வியை உனக்கு கொடுப்பார்
உறங்கும் அறிவின் தூக்கத்தைக் கெடுப்பார்

ஊக்கத்துடன் கற்பிக்கும் ஆசானை பெற்றிடு

ஊரே வியக்கும் கல்வியை கற்றிடு
ஊஞ்சலாய் ஆடும் மனதினை மாற்றிடு
ஊரே வியந்திடும் உயரத்தில் ஏறிடு

எல்லா துறையிலும் அவசியம் தேவை

எல்லா காலத்திலும் செய்திடும் சேவை
எந்த பொருளும் கல்வியின்றி அமையாது
எண்ணிப்பார் ஆசானின்றி கல்வியே இருக்காது

ஏளனம் செய்யாதே கல்வியை விற்று

ஏனிந்த நிலையென நீயோசி சற்று
ஏழைகளும் கல்விபெற்று முன்னேற வேண்டும்
ஏற்றிவிட இரக்கங்கொண்ட நல்லாசான் வேண்டும்

ஐயங்களைத் தீர்த்து அறிவுதரும் குருவே

ஐயமில்லை அவனே இறைவனின் உருவே
ஐம்புலன்களை அடக்கும் புத்தியும் தருவான்
ஐம்பூதங்களை கடக்கும் சித்தியும் தருவான்

ஒன்றும் இல்லாதோருக்கு எல்லாம் தரும்

ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் வரும்
ஒருவர் பெரும் கல்வி அறிவு
ஒருபிறவி முழுதும் தரும் செறிவு

ஓடமாயிருந்து நம்மை சேர்ப்பார் கரை

ஓயமாட்டார் ஒன்றை கற்பிக்கும் வரை
ஓங்கிய கல்விக்கு எல்லையே இல்லை
ஓர் ஆசானில்லையேல் அக்கல்வியே இல்லை.

                  

uyir thandhai

                          உயிர் தந்தை 

அன்பிற்கு அன்னையெனில் அறிவிற்கு தந்தை
அனுபவ அறிவைத் தருவதில் சந்தை
அனலாய் கொதித்து மகனைத் திட்டுவார்
அதேநேரம் அளவில்லா அன்பினை காட்டுவார்

ஆதம் தொடங்கிய அழகிய உறவு

ஆழம் மிகுந்த அற்புத உணர்வு
ஆளாக்குவதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு
ஆதவனே வியக்கும் அச்செயல் கண்டு

இரவும் பகலும் அயராது உழைப்பதும்

இல்லை என்று கூறாது கொடுப்பதும்
இனிய தந்தையின் சிறந்த குணம்
இமயம் போல் உயர்ந்த மனம்

ஈரைந்து மாதங்கள் சுமக்கவில்லை என்றாலும்

ஈன்ற பிள்ளையை சுமப்பார் மனதில் எந்நாளும்
ஈர நெஞ்சமும் இறக்க குணமும்
ஈன்ற பிள்ளைக்குத் தந்தை தரும் வரமாம்.

உலகத்துக்கே தந்தை ஒளிதரும் ஆதவன்

உனக்கும் எனக்கும் நம்தந்தையே ஆதவன்
உன்னை காக்கும் உயர்ந்த சுவரே
உழைப்பையும் உயர்வையும் கற்பித்த அவரே

ஊக்கத்தையும் கொடுத்து உணவையும் கொடுத்து

ஊரே வியக்கும் கல்வியும் கொடுத்து
ஊருக்கே சொல்லி பெருமை படுவார்
ஊமை கூட உன்புகழ் பாடும்படி செய்வார்


எல்லா தேர்விலும் எளிதாம் வினாத்தாள்
எதிரே தந்தையின் உந்துதல் இருந்தால்
எதையும் ஆழமாக சிந்துத்துப் பார்ப்பார்
எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துத் தீர்ப்பார்

ஏணியாய் முன்னேற வைத்திடுவார் நம்மை

ஏமாற்றம் தாராமல் செய்திடுவார் நன்மை
ஏற்றிவிட்ட தந்தையின் ஆசியே போதும்
ஏற்பட்ட துன்பங்கள் தூசியாய் போகும்

ஐம்பதை தாண்டியும் ஓய்வு பெறாமல்

ஐம்புலனுக்கும் முழு இன்பம் தராமல்
ஐவர் குடும்பத்தில் உழைக்கும் ஒருவன்
ஐயமில்லை அவனே நமக்கு இறைவன்

ஒருவர் வாழ்வில் ஒளிமயம் ஆக

ஒருமுறை தந்தை பதவியை பெருக
ஒத்துக்கொள்வாய் அது மிக பெரிது
ஒருமுறை மட்டும் பெற்றால் நல்லது

ஓய்வுக்குப் பின்னும் ஓயாத சிந்தை

ஓரங்கட்டாதே அறிவில் தேயாத தந்தை
ஓதும் மந்திரம் எல்லாம் வீணாகிபோகும்
ஓர் தந்தையின் சொல்லே மந்திரமாகும்.

Tuesday 31 January 2012

uyir (eluthu) thaai

                உயிர் (எழுத்து) தாய்

ன்னை ஓர் ஆலயம் என்று 

அவளை போற்றிப் புகழ்வது நன்று 

அன்பு தருவதில் அட்சய பாத்திரம் 

அதுவே அவளின் தாரக மந்திரம்

 

தாமின் மனைவி தொடங்கிய உறவு

ஆண்டவனின் மனம் அடங்கிய உறவு

ஆளாக்கும் அன்பில் வெள்ளப் பேருக்கு 

ஆயினும் அவளிடம் இல்லை செருக்கு 

 

இனிமையில் தாய் அமிர்தத்தை வென்றாள்

 இதயத்தின் மையத்தில் இனிதே நின்றாள்

இரவும் பகலும் காக்கும் கண்கள் 

இனிய உறவை உருவாக்கும் பெண்கள் 



ஈ எறும்பும் அண்டாமல் காப்பாள் 

ஈன்ற பிள்ளையை இமயத்தில் சேர்ப்பாள் 

ஈரமிக்க நெஞ்சில் கங்கையே தோற்கும் 

ஈசனுக்கு நிகரென உலகமே ஏற்கும்



உரலில் உன்னைக் கட்டுவதும் அன்னை

உறங்காமல் உணவை ஊட்டுவதும் அன்னை 

உள்ளே இருந்து உதைக்கும் உன்னை

உருகும் அன்பால் வதைக்கும் அன்னை

 

 

ஊரே தன் பிள்ளையை ஏசினாலும்

ஊடகம் எல்லாம் தவறாக பேசினாலும்

ஊக்கம் பெற்றத் தாய் நம்பமாட்டாள்

ஊனமாய் பிறந்தாலும் வெறுக்க மாட்டாள்

 

எல்லா உயிர்களும் போற்றும் பாசம்

எளிதில் உலகில் கிடைக்கும்  நேசம்

எக்காரணம் கொண்டும் தாயை மறக்காதே

எல்லாரிடமும் அடிபட்டு நாயாய் இறக்காதே

 

எவனொருவன் தருவானோ தாயிற்கு முதன்மை

எதிர்வரும் பிறவிகளிலும் அவனுக்கு நன்மை

எவராலும் அடைக்க முடியாத பெருங்கடன்  

எதிர்பாராமல் நேசிக்கும் தாயின் நன்றிக்கடன்

 

ஏதுமறியா மழலையின் அழுகுரலை கேட்பாள்

ஏக்கத்தையும் வலியையும் ஒருநொடியில்   மறப்பாள்

ஏரால் உழப்பட்ட நிலத்தின் பயிராய்

ஏற்பட்ட உறவில் இருப்பாள் உயிராய்

 

ஐந்தாம் முகமாம் பிரம்மனின் உருவில்

ஐக்கியம் ஆகிவிடு அவ்வுன்னத உறவில்

ஐந்தறிவு பெற்ற விலங்கு முதல்

ஐயமில்லை உறவில் தாயே முதல்

 

ஒளிமிக்க உறவில் தாயே தோரணம்

ஒருநாள் முழுவதும் கூறலாம் காரணம்

ஒருமுறை தாயாய் இருந்தால் தெரியும்

ஒருதாயின் இன்ப துன்பங்கள் புரியும்

 

ஓரளவு இன்பம் தரும் காதல்

ஓரளவிற்கு மேல் நட்பில் மோதல்

ஓர் அன்னையிடம் காதல் நட்பு

ஓங்கி நிற்காமல் போதல் இயல்பு.  

 

 

 

 

  

 

 

   

 

mother

                              தாய்

கருவறையில் நாம் காத்திருந்த போது
கஷ்டப்பட்டு நம்மை காத்திருந்த சாது
இருட்டறையென நாம் அஞ்சியதை பார்த்து
இஷ்டப்பட்டு நம்மை அரவணைத்தால் சேர்த்து

தந்தையை யாரென சொல்வதும் அவளே

தரணியில் முதலிடம் வெல்வதும் அவளே
சிந்தை முழுவதும் வியாபித்து நின்றாயே!
சிறுவன் எனக்காக மறுமுறை பிறந்தாயே!!

 

Monday 30 January 2012

uyir(eluthu)kaadhalargal

               உயிர்(எழுத்து)காதலர்கள்

 காதலன்:ழகால் என்னை கவர்ந்துவிட்டாய்
                    ஆயுதமின்றி என்னை கொன்றுவிட்டாய்
                    இமைத்தால் போதும் இந்நொடியே
                    ஈருடல் ஓருயிர் என்றிருப்போம்
                    உன்னுடன் நானும் சேர்ந்துவிட்டால்
                    ஊரே எதிர்ப்பினும் விடமாட்டேன்
                    என்னுயிர் தாவென நீ கேட்டால்
                    ஏனென்று கேளாமல் உயிர்விடுவேன்
                    ஐயமின்றி நான் சொல்கிறேன்
                    ஒருநாள் வாழ்க்கை என்றாலும்
                    ஓலைக்குடிசையில் என்றாலும்
உன்னுடன்தான்.


காதலி: ன்பால் என்னை ஈர்த்துவிட்டாய்

                ஆயினும் என்னால் முடியாது
                இருக்கிறேன் என்பதன் காரணமே
                ஈன்றெடுத்த என் பெற்றோரே
                உன்னுடன் நான் வந்துவிட்டால்
                ஊரே ஏசும் பரவாஇல்லை
                என் பெற்றோரே எனை எதிர்த்தால்
                ஏகப்பட்ட வருத்தம் வரும்
                ஐயமின்றி நான் வரமாட்டேன்
                ஒன்றை சொல்கிறேன் கேட்டுவிடு
                ஓரமாய் ஒதுங்கி எனை
விட்டுவிடு

Sunday 29 January 2012

don't kill yourself

               உன்னைக்  கொல்லாதே 

 கலிகால வெள்ளம் வருகையிலே ...
         நெட்டுக் குத்து மரங்களெல்லாம்
  விட்டுக்கொடுக்காமல் வீழ்ந்து விடும்
         சாய்ந்து கொடுக்கும் பசும்புல்லோ
  வாய்ப்பு பெற்று வாழ்ந்து விடும்

  சுழலும் பூமி நிற்கவில்லை இன்று
           நாளை தொடருமா தெரியவில்லை
  நிழலும் நிற்காது உனக்காக என்று
           தெரிந்துகொண்டால் பயமில்லை


   வானத்தில் பறக்கும் சக்தி பெற்றும் 
           நீரின் மேல் மிதக்கும் கருவி பெற்றும்
   ஞானத்தில் திளைக்கும் அறிவு இன்றி
           பாரின் மேல் வாழ்வது கடினமன்றோ?


   உன் கையில் எதுவும் இல்லை
            வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமில்லை
    வருகிறோம் வாழ்கிறோம் போகிறோம்
             நிலைத்து யாரும் நிற்பதில்லை

    
    வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்தால் தான்
             வாழ்வேன் என நீ சொன்னால்
    வாழும் உயிர்கள் அனைத்தையும்
             உன்னுடன் அழைத்துச் சென்றுவிடு
    
 
 
         

Thursday 26 January 2012

en muthukkuliyal...

                         என் முத்துக்குளியல் 

குளித்துவிட்டு வந்து விடலாம் என்று தான் 
குதித்தேன் கவிதைக்கடலில் அன்று...
ஆனால் முத்துடன் தான் கரை வர வேண்டும்
என தோன்றுகிறது இன்று.... 

India (anrum, inrum)

             உயிர்(எழுத்து)இந்தியா 
                  (அன்றும் இன்றும்)

அன்னியர் ஆட்சியை அகற்றிய நாடு
அதன்பின் அரசியல்வாதி கைப்பற்றிய நாடு

ஆங்கிலேயர் ஆட்சியே நல்லது என்று
ஆமோதிக்கும் அளவு உள்ளது இன்று

இதிகாசம் இலக்கியங்கள் பல பார்த்திருக்கின்றது
இறக்கம் கொண்டு குற்றத்தை ஊக்குவிக்கன்றது

ஈடு இணையற்ற இந்திய நாடு
ஈரமும் இரக்கமும் மறந்த நாடு

உலகத்தில் வளங்களில் முதலிடம் பெற்றது
உலகத்தில் ஊழலில் முதலிடம் பெற்றது

ஊரெங்கும் கலையும் கலாச்சாரமும் சிறந்தது
ஊறிய நாகரிகத்தில் அவ்விரண்டும் இறந்தது

எதுவும் தனக்கென்று எண்ணாதோரின் ஆட்சி
எல்லாம் தனக்கென்று எண்ணுவோரின் ஆட்சி

ஐந்தில் நால்வர் நல்லவர் ஆட்சியில்
ஐந்தில் நால்வர் கெட்டவர் ஆட்சியில்

ஒற்றுமையும் ஒழுக்கமும் நிறைந்து இருந்தது
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே குறைந்தது

ஓசையின்றி இந்தியா வலுவிழந்து உள்ளது
ஓரளவாவது உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது

(ஒளவை பிறந்து தமிழை வளர்த்தார் அன்று
ஔடதம் குடித்து அத்தமிழே இறக்கும் இன்று) 

உயிர் இந்தியா  ............  இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது  


           
 

Monday 23 January 2012

iraivanaai paarkaadhe!!!

                  இறைவனாய் பார்க்காதே

மைதியாய் இருந்திடு மருத்துவ அலுவலகத்தில்

அதுவே கோயிலுக்கு அடுத்தது இவ்வுலகத்தில்

அனுமதியின்றி வருவது கொடிய நோயே 

அலறியோட வைப்பது நம் மருத்துவத் தாயே


பத்தை தருகின்ற நோயினைக் கொன்று

ஆண்டவனாய் நிற்கின்ற மருத்துவம் நன்று

ஆலயத்தில் மந்திரத்தை ஓதும் ஐயர்

ஆண்டவனான மருத்துவத்தை செய்யும் மருத்துவர்


றைவனின் அருளால் உயிர் பிழைப்பதுண்டு

இறைவனே ஐயர் என புகழ்வதுண்டு

இன்னுயிர் போய்விடின் மருத்துவரை பிடிப்பதுண்டு

இறைவனை விட்டுவிட்டு ஐயரை அடிப்பதுண்டு



ரநெஞ்சம் கொண்ட மருத்துவர் மேல் 

ஈவு இறக்கம் காட்டுவீர் இனிமேல்

ஈன்ற குழந்தை பிறந்தநாள் முதல் வேண்டும் 

ஈமச்சடங்கு வரை மருத்துவம் வேண்டும்



றவுக்கு உயிர்போனால் உதைக்காதே மருத்துவரை

உணர்ச்சிகளுக்கு வசப்பட்டு செய்யாதே பெருந்தவறை

உயிர்காக்கும் தொழிலுக்கு மரியாதை வழங்கிடு

உண்மையிலேயே தவிறிருந்தால் நீதிகேட்டு வழக்கிடு


ரே போற்றிடும் உன்னத தொழில்

ஊக்கத்துடன் செய்திட பெற்றிடும் எழில்

ஊமையும் குருடனும் மறுவாழ்வு பெறுவதுண்டு

ஊழையும் வென்று உயிரைத் தருவதுமுண்டு


த்தனையோ சாதித்தாலும் பணிவு உண்டு

எமனையே எதிர்க்கின்ற துணிவு உண்டு

என்றும் நிலைத்திடும் நல்ல மருத்துவம்

என்றுமே அழியாது அதன் மகத்துவம்


மாற்றம் தாராத துறையும் உண்டோ?

ஏளனப் படுத்துவதில் நியாயம் உண்டோ?

ஏற்றமும் இரக்கமும் இயற்கை தானே

ஏன் இறங்குகிறாய் வன்முறையில் வீணே



யமில்லை என்பதில்லை என்றும் மருத்துவத்தில்

ஐக்கியம் ஆகிவிடு அதன் தத்துவத்தில்

ஐந்து விரலால் எழுதப்படும் மருந்து

ஐயமில்லை தலைவிதியாய் விளங்கும் சிறந்து



ட்டி பிறக்கும் குழந்தைகளைப் பிரிப்பதுண்டு

ஒருசில சமயத்தில் குழந்தை இறப்பதுண்டு

ஒருமருந்தும் அமிர்தம் கிடையாது மனிதனே

ஒத்துக்கொள்ள வேண்டுமே மருத்துவனும் மனிதனே



துவது மட்டும்தான் ஐயரின் வேலை

ஓருயிரை  காப்பாற்றுவதோ இறைவனின் லீலை

ஓர் இறைவனாய் மருத்துவரைப் பார்க்காதே!

ஓருயிர் பிரிந்தால் மருத்துவரைத் தாக்காதே!! 



 


  









  

Saturday 21 January 2012

thinga thikku mukkaada udalil koluppu thanga adharku thaga....

    திங்க திக்குமுக்காட உடலில் கொழுப்பு
    தங்க அதற்குத் தக...  இப்படியா உண்பது.... இல்லை .... இது சிரிக்க மட்டும்தான் செரிக்க அல்ல... 


                              உணவே மருந்து 

தாய்வழி  கிடைக்கின்ற முதற் பொருள்
வாய்வழி போகின்ற முக்கிய பொருள்
ஆறுமாதம் முடியும்வரை தாய்ப்பால் மட்டும்
வேறுசாதம் அதன்பின் சேர்த்தால் ஒட்டும்

செரிக்கப்பட்டு வயிற்றில் சிறிதாகும் உணவு
எரிக்கப்பட்டு சக்தியாய் உடலுக்காகும் வரவு
அளவான உணவை அமிர்தமென அருந்து
அளவாக உண்டால் அதுவே மருந்து

இரத்தக் கொதிப்பை  சீராக வைத்திடு
நித்தம் உப்பை உணவினில் குறைத்திடு
அலுப்புடன் இருக்கும் உடலினைத் தவிர்த்திடு
கொழுப்புடன் இருக்கும் உணவினைக் குறைத்திடு

எளிதாக செரியும் உணவினை உண்க
தெளிவாக தெரியும் பலன்களை காண்க
பார்வை நன்கு தெரிய வைக்கும்
சோர்வை நீக்கி தெளிய வைக்கும்

உள்ளம் அமைதி பெற மனப்யிற்சி
உணவு செரிமானம் பெற உடற்பயிற்சி
உணவுடன் செய்திடு அதையும் சேர்த்து
உலகையே மயக்கிடு கட்டுடலால் ஈர்த்து

உயிர் வாழ்வதற்கு உண்பது நன்று
உயிர் வாழ்வதே உண்பதற்கு அன்று
மதுவும் ஓருணவே எனினும் அஞ்சு
அதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு

செல்வது உள்ளே எந்தளவு முக்கியம்
செல்வது வெளியே அதேயளவு முக்கியம்
ஒருநாளும் கழியாதே காலைக்கடன் அடைக்காமல்
ஒருநாளும் உண்ணாதே கழிவுகளை அகற்றாமல்

பசிக்காக புசித்தால் உடலில் தங்கும்
ருசிக்காக புசித்தால் உடல்நிலை மங்கும்
நேசித்து உண்ணப்படும் உணவு விருந்தாகும்
யோசித்து உண்ணப்படும் உணவே மருந்தாகும்

யோசிப்பதும் நேசிப்பதும் உன் விருப்பம்
வாசிப்பதும் எழுதுவதும் என் விருப்பம்
எழுதிவிட்டேன் எனக்கு தெரிந்த உண்மை
பழுதுநீக்கி உண்டால் உனக்கு நன்மை

அளவான நல்ல உணவே மருந்தாகும்
வளமான நல்ல வாழ்வுக்கு வழியாகும்.
உணவே மருந்தென உணர்ந்து விடு!
உடலையும் மனதையும் வென்று விடு!!   


                                                                                 
         
    
 
 
 
 

 
      


Friday 20 January 2012

idhai pol varumaa?...

                   சிறு கவிதை 
       தன்னிடம் இல்லையெனினும்
          உலகுக்கே தரும் நிழல்
          சூரியன் 

arasiyal adhala baadhaalithil poyi vittadhu.....

                       சிறு கவிதை 

                     கடமையை செய்
                     பலனை எதிர்பாராதே 
                     வாக்களிப்பு 

Thursday 19 January 2012

vara vara road la flight otra madiri fast ....

                                            சிறு கவிதை 
     வேகமாக சாலையில் செல்லுங்கள்
       வேகமாக போயி சேர்ந்துவிடுவீர்கள்
       மேலே 

tamizhpadangalil tamizhin perumai kuraindhuvittadhu...

                   சிறு கவிதை
         
         தமிழர்கள் தெரிந்தே
         ஏற்கும் கலப்படம்
         தமிழ் படம் 
   

mass aga irndha vaigai aaru maasudan irukiradhu...

                       சிறு கவிதை
         குளித்ததால் 
            கிருமித்தொற்று வந்தது
            வைகையாற்றில்.

Wednesday 18 January 2012

Importance of walking in english

                                                  Walking 
              (English version of nadaipayirchi)


                 Walk  daily  as  fast  as  you  can,
                       you  will  say  then , my  laziness  ran;
                 walk  daily  as  vigorous  as  you  can,
                        you  will  become  very  healthy  man:

                Every part  of  your  body  will  function  properly,
                       everyday  if  you  walk  a mile  or  two  regularly;
                blood pressure  will  be  maintained  normal,
                       blood sugar  will  also  be  kept  within  normal: 

               Your  muscles  will  be  improving  in  function,
                      you  will  be  younger  even  while  getting  pension;
               all  the  nerves  will  get  good  strength  and  glow,
                      all  the  parts  will  get  very  good  blood  flow:

             Evenly  from  head  to  foot, everything  will  be  fine,
                 even  when  you  get  older, you'll have  a  straight spine;
             everyday  if  you  walk  till  you  breathe  heavily,
                  every night  without  pill  you  will  sleep  nicely:

             Immune  system  status  will  be  flourished,
                      irregular  fat  stores  will  be  diminished;
             if  you  believe ,  follow  the  above  said  matter,
                      if   you  have  doubt , consult  a  good  doctor:

             If  you  want  to  be  healthy  and  stronger,
                      if  you  want  to  extend  healthier  life  longer,
            let's  stop  talking  now  itself  and 
                     let's  start  WALKING  today  itself.
      



 

Tuesday 17 January 2012

Importance of walking

                                          நடைப்பயிற்சி 

கட  கட  கடவென  காலையில்  நட 
கரங்களை  வீசி  விரைவாக  நட
தட  தட  தடவென  தரணியில்  நட
தடகள வீரனை  போல  தலை  நிமிர்ந்து  நட

குறைந்திருக்கும்  உடலின்  கொழுப்பின்  எடை
நிறைந்திருக்கும்  உடலில்  எதிர்க்கும்  படை
சீராக  வைத்திடும்  இரத்த  கொதிப்பு
வாராது  இனிமேல்  இருதய  பாதிப்பு

மூச்சு வாங்க  தினமும்  நடையாத்திரை  
தூக்கம் வாங்க  தேவையில்லை  இனிமாத்திரை
நரம்பெல்லாம்  நல்ல  சக்தி  பெரும் 
வரம்பின்றி  இரத்தம்  நன்கு  ஓடும்

தசைகள்  எல்லாம்  புத்துயிர்  பெரும் 
தலைமுதல்  கால்வரை  புத்துணர்வு  தரும்
தரைபார்க்கும் கூஉநி  வராமல்  இருக்கும்
தடுமாறும்  உடல்நலம்  கெடாமல்  இருக்கும்

சர்க்கரை  நோயினை  கட்டுக்குள்  வைக்கும்
சகல  நோய்களும்  வராமல்  தடுக்கும் 
சமர்பித்த  கருத்துக்கள்  உண்மையே  ஏற்றுக்கொள் 
சந்தேகம்  இருப்பின்  மருத்துவரை  கேட்டுக்கொள் 

நாளும்  நலமாக  வாழ  வேண்டுமா?
வாழும்  காலம்  நீள  வேண்டுமா?
இன்றே  தொடங்குவோம்  புதுமுயற்சி 
நன்றே  பழகுவோம்  நடைப்பயிற்சி