உயிர் (எழுத்து) தாய்
Tuesday 31 January 2012
mother
தாய்
கருவறையில் நாம் காத்திருந்த போது
கஷ்டப்பட்டு நம்மை காத்திருந்த சாது
இருட்டறையென நாம் அஞ்சியதை பார்த்து
இஷ்டப்பட்டு நம்மை அரவணைத்தால் சேர்த்து
தந்தையை யாரென சொல்வதும் அவளே
தரணியில் முதலிடம் வெல்வதும் அவளே
சிந்தை முழுவதும் வியாபித்து நின்றாயே!
சிறுவன் எனக்காக மறுமுறை பிறந்தாயே!!
Monday 30 January 2012
uyir(eluthu)kaadhalargal
உயிர்(எழுத்து)காதலர்கள்
காதலன்:அழகால் என்னை கவர்ந்துவிட்டாய்
ஆயுதமின்றி என்னை கொன்றுவிட்டாய்
இமைத்தால் போதும் இந்நொடியே
ஈருடல் ஓருயிர் என்றிருப்போம்
உன்னுடன் நானும் சேர்ந்துவிட்டால்
ஊரே எதிர்ப்பினும் விடமாட்டேன்
என்னுயிர் தாவென நீ கேட்டால்
ஏனென்று கேளாமல் உயிர்விடுவேன்
ஐயமின்றி நான் சொல்கிறேன்
ஒருநாள் வாழ்க்கை என்றாலும்
ஓலைக்குடிசையில் என்றாலும்
உன்னுடன்தான்.
காதலி: அன்பால் என்னை ஈர்த்துவிட்டாய்
ஆயினும் என்னால் முடியாது
இருக்கிறேன் என்பதன் காரணமே
ஈன்றெடுத்த என் பெற்றோரே
உன்னுடன் நான் வந்துவிட்டால்
ஊரே ஏசும் பரவாஇல்லை
என் பெற்றோரே எனை எதிர்த்தால்
ஏகப்பட்ட வருத்தம் வரும்
ஐயமின்றி நான் வரமாட்டேன்
ஒன்றை சொல்கிறேன் கேட்டுவிடு
ஓரமாய் ஒதுங்கி எனை
விட்டுவிடு
Sunday 29 January 2012
don't kill yourself
உன்னைக் கொல்லாதே
கலிகால வெள்ளம் வருகையிலே ...
நெட்டுக் குத்து மரங்களெல்லாம்
விட்டுக்கொடுக்காமல் வீழ்ந்து விடும்
சாய்ந்து கொடுக்கும் பசும்புல்லோ
வாய்ப்பு பெற்று வாழ்ந்து விடும்
சுழலும் பூமி நிற்கவில்லை இன்று
நாளை தொடருமா தெரியவில்லை
நிழலும் நிற்காது உனக்காக என்று
தெரிந்துகொண்டால் பயமில்லை
வானத்தில் பறக்கும் சக்தி பெற்றும்
நீரின் மேல் மிதக்கும் கருவி பெற்றும்
ஞானத்தில் திளைக்கும் அறிவு இன்றி
பாரின் மேல் வாழ்வது கடினமன்றோ?
உன் கையில் எதுவும் இல்லை
வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமில்லை
வருகிறோம் வாழ்கிறோம் போகிறோம்
நிலைத்து யாரும் நிற்பதில்லை
வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்தால் தான்
வாழ்வேன் என நீ சொன்னால்
வாழும் உயிர்கள் அனைத்தையும்
உன்னுடன் அழைத்துச் சென்றுவிடு
Thursday 26 January 2012
India (anrum, inrum)
உயிர்(எழுத்து)இந்தியா
(அன்றும் இன்றும்)
அன்னியர் ஆட்சியை அகற்றிய நாடு
அதன்பின் அரசியல்வாதி கைப்பற்றிய நாடு
ஆங்கிலேயர் ஆட்சியே நல்லது என்று
ஆமோதிக்கும் அளவு உள்ளது இன்று
இதிகாசம் இலக்கியங்கள் பல பார்த்திருக்கின்றது
இறக்கம் கொண்டு குற்றத்தை ஊக்குவிக்கன்றது
ஈடு இணையற்ற இந்திய நாடு
ஈரமும் இரக்கமும் மறந்த நாடு
உலகத்தில் வளங்களில் முதலிடம் பெற்றது
உலகத்தில் ஊழலில் முதலிடம் பெற்றது
ஊரெங்கும் கலையும் கலாச்சாரமும் சிறந்தது
ஊறிய நாகரிகத்தில் அவ்விரண்டும் இறந்தது
எதுவும் தனக்கென்று எண்ணாதோரின் ஆட்சி
எல்லாம் தனக்கென்று எண்ணுவோரின் ஆட்சி
ஐந்தில் நால்வர் நல்லவர் ஆட்சியில்
ஐந்தில் நால்வர் கெட்டவர் ஆட்சியில்
ஒற்றுமையும் ஒழுக்கமும் நிறைந்து இருந்தது
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே குறைந்தது
ஓசையின்றி இந்தியா வலுவிழந்து உள்ளது
ஓரளவாவது உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது
(ஒளவை பிறந்து தமிழை வளர்த்தார் அன்று
ஔடதம் குடித்து அத்தமிழே இறக்கும் இன்று)
உயிர் இந்தியா ............ இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது
உயிர் இந்தியா ............ இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது
Monday 23 January 2012
iraivanaai paarkaadhe!!!
இறைவனாய் பார்க்காதே
அமைதியாய் இருந்திடு மருத்துவ அலுவலகத்தில்
அதுவே கோயிலுக்கு அடுத்தது இவ்வுலகத்தில்
அனுமதியின்றி வருவது கொடிய நோயே
அலறியோட வைப்பது நம் மருத்துவத் தாயே
ஆபத்தை தருகின்ற நோயினைக் கொன்று
ஆண்டவனாய் நிற்கின்ற மருத்துவம் நன்று
ஆலயத்தில் மந்திரத்தை ஓதும் ஐயர்
ஆண்டவனான மருத்துவத்தை செய்யும் மருத்துவர்
இறைவனின் அருளால் உயிர் பிழைப்பதுண்டு
இறைவனே ஐயர் என புகழ்வதுண்டு
இன்னுயிர் போய்விடின் மருத்துவரை பிடிப்பதுண்டு
இறைவனை விட்டுவிட்டு ஐயரை அடிப்பதுண்டு
ஈரநெஞ்சம் கொண்ட மருத்துவர் மேல்
ஈவு இறக்கம் காட்டுவீர் இனிமேல்
ஈன்ற குழந்தை பிறந்தநாள் முதல் வேண்டும்
ஈமச்சடங்கு வரை மருத்துவம் வேண்டும்
உறவுக்கு உயிர்போனால் உதைக்காதே மருத்துவரை
உணர்ச்சிகளுக்கு வசப்பட்டு செய்யாதே பெருந்தவறை
உயிர்காக்கும் தொழிலுக்கு மரியாதை வழங்கிடு
உண்மையிலேயே தவிறிருந்தால் நீதிகேட்டு வழக்கிடு
ஊரே போற்றிடும் உன்னத தொழில்
ஊக்கத்துடன் செய்திட பெற்றிடும் எழில்
ஊமையும் குருடனும் மறுவாழ்வு பெறுவதுண்டு
ஊழையும் வென்று உயிரைத் தருவதுமுண்டு
எத்தனையோ சாதித்தாலும் பணிவு உண்டு
எமனையே எதிர்க்கின்ற துணிவு உண்டு
என்றும் நிலைத்திடும் நல்ல மருத்துவம்
என்றுமே அழியாது அதன் மகத்துவம்
ஏமாற்றம் தாராத துறையும் உண்டோ?
ஏளனப் படுத்துவதில் நியாயம் உண்டோ?
ஏற்றமும் இரக்கமும் இயற்கை தானே
ஏன் இறங்குகிறாய் வன்முறையில் வீணே
ஐயமில்லை என்பதில்லை என்றும் மருத்துவத்தில்
ஐக்கியம் ஆகிவிடு அதன் தத்துவத்தில்
ஐந்து விரலால் எழுதப்படும் மருந்து
ஐயமில்லை தலைவிதியாய் விளங்கும் சிறந்து
ஒட்டி பிறக்கும் குழந்தைகளைப் பிரிப்பதுண்டு
ஒருசில சமயத்தில் குழந்தை இறப்பதுண்டு
ஒருமருந்தும் அமிர்தம் கிடையாது மனிதனே
ஒத்துக்கொள்ள வேண்டுமே மருத்துவனும் மனிதனே
ஓதுவது மட்டும்தான் ஐயரின் வேலை
ஓருயிரை காப்பாற்றுவதோ இறைவனின் லீலை
ஓர் இறைவனாய் மருத்துவரைப் பார்க்காதே!
ஓருயிர் பிரிந்தால் மருத்துவரைத் தாக்காதே!!
Saturday 21 January 2012
thinga thikku mukkaada udalil koluppu thanga adharku thaga....
திங்க திக்குமுக்காட உடலில் கொழுப்பு
தங்க அதற்குத் தக... இப்படியா உண்பது.... இல்லை .... இது சிரிக்க மட்டும்தான் செரிக்க அல்ல...
உணவே மருந்து
வாய்வழி போகின்ற முக்கிய பொருள்
ஆறுமாதம் முடியும்வரை தாய்ப்பால் மட்டும்
வேறுசாதம் அதன்பின் சேர்த்தால் ஒட்டும்
செரிக்கப்பட்டு வயிற்றில் சிறிதாகும் உணவு
எரிக்கப்பட்டு சக்தியாய் உடலுக்காகும் வரவு
அளவான உணவை அமிர்தமென அருந்து
அளவாக உண்டால் அதுவே மருந்து
இரத்தக் கொதிப்பை சீராக வைத்திடு
நித்தம் உப்பை உணவினில் குறைத்திடு
அலுப்புடன் இருக்கும் உடலினைத் தவிர்த்திடு
கொழுப்புடன் இருக்கும் உணவினைக் குறைத்திடு
எளிதாக செரியும் உணவினை உண்க
தெளிவாக தெரியும் பலன்களை காண்க
பார்வை நன்கு தெரிய வைக்கும்
சோர்வை நீக்கி தெளிய வைக்கும்
உள்ளம் அமைதி பெற மனப்யிற்சி
உணவு செரிமானம் பெற உடற்பயிற்சி
உணவுடன் செய்திடு அதையும் சேர்த்து
உலகையே மயக்கிடு கட்டுடலால் ஈர்த்து
உயிர் வாழ்வதற்கு உண்பது நன்று
உயிர் வாழ்வதே உண்பதற்கு அன்று
மதுவும் ஓருணவே எனினும் அஞ்சு
அதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு
செல்வது உள்ளே எந்தளவு முக்கியம்
செல்வது வெளியே அதேயளவு முக்கியம்
ஒருநாளும் கழியாதே காலைக்கடன் அடைக்காமல்
ஒருநாளும் உண்ணாதே கழிவுகளை அகற்றாமல்
பசிக்காக புசித்தால் உடலில் தங்கும்
ருசிக்காக புசித்தால் உடல்நிலை மங்கும்
நேசித்து உண்ணப்படும் உணவு விருந்தாகும்
யோசித்து உண்ணப்படும் உணவே மருந்தாகும்
யோசிப்பதும் நேசிப்பதும் உன் விருப்பம்
வாசிப்பதும் எழுதுவதும் என் விருப்பம்
எழுதிவிட்டேன் எனக்கு தெரிந்த உண்மை
பழுதுநீக்கி உண்டால் உனக்கு நன்மை
அளவான நல்ல உணவே மருந்தாகும்
வளமான நல்ல வாழ்வுக்கு வழியாகும்.
உணவே மருந்தென உணர்ந்து விடு!
உடலையும் மனதையும் வென்று விடு!!
Friday 20 January 2012
arasiyal adhala baadhaalithil poyi vittadhu.....
சிறு கவிதை
கடமையை செய்
பலனை எதிர்பாராதே
வாக்களிப்பு
Thursday 19 January 2012
vara vara road la flight otra madiri fast ....
சிறு கவிதை
வேகமாக சாலையில் செல்லுங்கள்
வேகமாக போயி சேர்ந்துவிடுவீர்கள்
மேலே
tamizhpadangalil tamizhin perumai kuraindhuvittadhu...
சிறு கவிதை
தமிழர்கள் தெரிந்தே
தமிழர்கள் தெரிந்தே
ஏற்கும் கலப்படம்
தமிழ் படம்
mass aga irndha vaigai aaru maasudan irukiradhu...
சிறு கவிதை
குளித்ததால்
கிருமித்தொற்று வந்தது
வைகையாற்றில்.
Wednesday 18 January 2012
Importance of walking in english
Walking
(English version of nadaipayirchi)
Walk daily as fast as you can,
you will say then , my laziness ran;
walk daily as vigorous as you can,
you will become very healthy man:
Every part of your body will function properly,
everyday if you walk a mile or two regularly;
blood pressure will be maintained normal,
blood sugar will also be kept within normal:
Your muscles will be improving in function,
you will be younger even while getting pension;
all the nerves will get good strength and glow,
all the parts will get very good blood flow:
Evenly from head to foot, everything will be fine,
even when you get older, you'll have a straight spine;
everyday if you walk till you breathe heavily,
every night without pill you will sleep nicely:
Immune system status will be flourished,
irregular fat stores will be diminished;
if you believe , follow the above said matter,
if you have doubt , consult a good doctor:
If you want to be healthy and stronger,
if you want to extend healthier life longer,
let's stop talking now itself and
let's start WALKING today itself.
Tuesday 17 January 2012
Importance of walking
நடைப்பயிற்சி
கட கட கடவென காலையில் நட
கரங்களை வீசி விரைவாக நட
தட தட தடவென தரணியில் நட
தடகள வீரனை போல தலை நிமிர்ந்து நட
குறைந்திருக்கும் உடலின் கொழுப்பின் எடை
நிறைந்திருக்கும் உடலில் எதிர்க்கும் படை
சீராக வைத்திடும் இரத்த கொதிப்பு
வாராது இனிமேல் இருதய பாதிப்பு
மூச்சு வாங்க தினமும் நடையாத்திரை
தூக்கம் வாங்க தேவையில்லை இனிமாத்திரை
நரம்பெல்லாம் நல்ல சக்தி பெரும்
வரம்பின்றி இரத்தம் நன்கு ஓடும்
தசைகள் எல்லாம் புத்துயிர் பெரும்
தலைமுதல் கால்வரை புத்துணர்வு தரும்
தரைபார்க்கும் கூஉநி வராமல் இருக்கும்
தடுமாறும் உடல்நலம் கெடாமல் இருக்கும்
சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும்
சகல நோய்களும் வராமல் தடுக்கும்
சமர்பித்த கருத்துக்கள் உண்மையே ஏற்றுக்கொள்
சந்தேகம் இருப்பின் மருத்துவரை கேட்டுக்கொள்
நாளும் நலமாக வாழ வேண்டுமா?
வாழும் காலம் நீள வேண்டுமா?
இன்றே தொடங்குவோம் புதுமுயற்சி
நன்றே பழகுவோம் நடைப்பயிற்சி
Monday 16 January 2012
jovial message
நகைச்சுவையாக கருத்து
அளவில்லா உப்பு
அளவில்லா கொழுப்பு
அளவில்லா மப்பு
பாதுகாப்பில்லா தப்பு
சந்தேகமில்லா ஆப்பு !!!
kadavul vazhthu
கடவுள் வாழ்த்து
அன்பென்னும் ஆகாயத்தில் அடங்கி நிற்பவனும் நீயே
ஆகாயத்தினும் விரிந்து மேலோங்கி நிற்பவனும் நீயே
இசையுடன் சிறுபூவை பரிசாய் ஏற்பவனும் நீயே
ஈகையுடன் உதவுபவனை பக்தனாய் ஏற்பவனும் நீயே
உண்மையுடன் உழைக்கும் உள்ளத்தில் இருப்பவனும் நீயே
ஊனுடன் உணவுண்ணும் கள்ளத்தில் இருப்பவனும் நீயே
எளிதாக ஏழே நொடிகளில் கிடைப்பவனும் நீயே
ஏழேழு பிறவிகள் காத்திருந்து கிடைக்காதவனும் நீயே
ஐயமின்றி அனைத்துயிர்களின் உருவமாய் இருப்பதும் நீயே
ஒளியுற்ற பகற்பொழுதிலும் உருவமற்று இருப்பவனும் நீயே
ஓதும் மந்திரங்களில் உயிராய் இருப்பவனும் நீயே
ஔவை முதல் அடியேன் வரை அனைவராலும் புகழப்படுவதும் நீயே
Subscribe to:
Posts (Atom)