Monday, 30 January 2012

uyir(eluthu)kaadhalargal

               உயிர்(எழுத்து)காதலர்கள்

 காதலன்:ழகால் என்னை கவர்ந்துவிட்டாய்
                    ஆயுதமின்றி என்னை கொன்றுவிட்டாய்
                    இமைத்தால் போதும் இந்நொடியே
                    ஈருடல் ஓருயிர் என்றிருப்போம்
                    உன்னுடன் நானும் சேர்ந்துவிட்டால்
                    ஊரே எதிர்ப்பினும் விடமாட்டேன்
                    என்னுயிர் தாவென நீ கேட்டால்
                    ஏனென்று கேளாமல் உயிர்விடுவேன்
                    ஐயமின்றி நான் சொல்கிறேன்
                    ஒருநாள் வாழ்க்கை என்றாலும்
                    ஓலைக்குடிசையில் என்றாலும்
உன்னுடன்தான்.


காதலி: ன்பால் என்னை ஈர்த்துவிட்டாய்

                ஆயினும் என்னால் முடியாது
                இருக்கிறேன் என்பதன் காரணமே
                ஈன்றெடுத்த என் பெற்றோரே
                உன்னுடன் நான் வந்துவிட்டால்
                ஊரே ஏசும் பரவாஇல்லை
                என் பெற்றோரே எனை எதிர்த்தால்
                ஏகப்பட்ட வருத்தம் வரும்
                ஐயமின்றி நான் வரமாட்டேன்
                ஒன்றை சொல்கிறேன் கேட்டுவிடு
                ஓரமாய் ஒதுங்கி எனை
விட்டுவிடு

No comments:

Post a Comment