அறுபதை தாண்டியும் ஓய்வின்றி உழைப்பவர்
ஆலமரம் போல் நின்று எங்களை காப்பவர்
இளமையிலேயே பல கஷ்டங்களை பார்த்தவர்
ஈர நெஞ்சுடன் பலரின் துயரைத் தீர்த்தவர்
உழைக்கும் கரங்களை உயர்த்தி விட்டவர்
ஊரே வியக்கும் உயரத்தைத் தொட்டவர்
எல்லா வளமும் பெற்று விளங்கிட
ஏற்பட்ட துன்பங்கள் விட்டு விலகிட
ஐயனிடம் வேண்டி வாழ்த்தி வணங்க
ஒன்றாய் கூடி நடத்தும் நிகழ்ச்சி
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்ச்சி
en thandhayin arubathi onraaam pirandha naal anru
ReplyDelete