Monday, 30 January 2012
Sunday, 29 January 2012
don't kill yourself
உன்னைக் கொல்லாதே
கலிகால வெள்ளம் வருகையிலே ...
நெட்டுக் குத்து மரங்களெல்லாம்
விட்டுக்கொடுக்காமல் வீழ்ந்து விடும்
சாய்ந்து கொடுக்கும் பசும்புல்லோ
வாய்ப்பு பெற்று வாழ்ந்து விடும்
சுழலும் பூமி நிற்கவில்லை இன்று
நாளை தொடருமா தெரியவில்லை
நிழலும் நிற்காது உனக்காக என்று
தெரிந்துகொண்டால் பயமில்லை
வானத்தில் பறக்கும் சக்தி பெற்றும்
நீரின் மேல் மிதக்கும் கருவி பெற்றும்
ஞானத்தில் திளைக்கும் அறிவு இன்றி
பாரின் மேல் வாழ்வது கடினமன்றோ?
உன் கையில் எதுவும் இல்லை
வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமில்லை
வருகிறோம் வாழ்கிறோம் போகிறோம்
நிலைத்து யாரும் நிற்பதில்லை
வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்தால் தான்
வாழ்வேன் என நீ சொன்னால்
வாழும் உயிர்கள் அனைத்தையும்
உன்னுடன் அழைத்துச் சென்றுவிடு
Thursday, 26 January 2012
India (anrum, inrum)
உயிர்(எழுத்து)இந்தியா
(அன்றும் இன்றும்)
அன்னியர் ஆட்சியை அகற்றிய நாடு
அதன்பின் அரசியல்வாதி கைப்பற்றிய நாடு
ஆங்கிலேயர் ஆட்சியே நல்லது என்று
ஆமோதிக்கும் அளவு உள்ளது இன்று
இதிகாசம் இலக்கியங்கள் பல பார்த்திருக்கின்றது
இறக்கம் கொண்டு குற்றத்தை ஊக்குவிக்கன்றது
ஈடு இணையற்ற இந்திய நாடு
ஈரமும் இரக்கமும் மறந்த நாடு
உலகத்தில் வளங்களில் முதலிடம் பெற்றது
உலகத்தில் ஊழலில் முதலிடம் பெற்றது
ஊரெங்கும் கலையும் கலாச்சாரமும் சிறந்தது
ஊறிய நாகரிகத்தில் அவ்விரண்டும் இறந்தது
எதுவும் தனக்கென்று எண்ணாதோரின் ஆட்சி
எல்லாம் தனக்கென்று எண்ணுவோரின் ஆட்சி
ஐந்தில் நால்வர் நல்லவர் ஆட்சியில்
ஐந்தில் நால்வர் கெட்டவர் ஆட்சியில்
ஒற்றுமையும் ஒழுக்கமும் நிறைந்து இருந்தது
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே குறைந்தது
ஓசையின்றி இந்தியா வலுவிழந்து உள்ளது
ஓரளவாவது உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது
(ஒளவை பிறந்து தமிழை வளர்த்தார் அன்று
ஔடதம் குடித்து அத்தமிழே இறக்கும் இன்று)
உயிர் இந்தியா ............ இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது
உயிர் இந்தியா ............ இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது
Monday, 23 January 2012
iraivanaai paarkaadhe!!!
இறைவனாய் பார்க்காதே
அமைதியாய் இருந்திடு மருத்துவ அலுவலகத்தில்
அதுவே கோயிலுக்கு அடுத்தது இவ்வுலகத்தில்
அனுமதியின்றி வருவது கொடிய நோயே
அலறியோட வைப்பது நம் மருத்துவத் தாயே
ஆபத்தை தருகின்ற நோயினைக் கொன்று
ஆண்டவனாய் நிற்கின்ற மருத்துவம் நன்று
ஆலயத்தில் மந்திரத்தை ஓதும் ஐயர்
ஆண்டவனான மருத்துவத்தை செய்யும் மருத்துவர்
இறைவனின் அருளால் உயிர் பிழைப்பதுண்டு
இறைவனே ஐயர் என புகழ்வதுண்டு
இன்னுயிர் போய்விடின் மருத்துவரை பிடிப்பதுண்டு
இறைவனை விட்டுவிட்டு ஐயரை அடிப்பதுண்டு
ஈரநெஞ்சம் கொண்ட மருத்துவர் மேல்
ஈவு இறக்கம் காட்டுவீர் இனிமேல்
ஈன்ற குழந்தை பிறந்தநாள் முதல் வேண்டும்
ஈமச்சடங்கு வரை மருத்துவம் வேண்டும்
உறவுக்கு உயிர்போனால் உதைக்காதே மருத்துவரை
உணர்ச்சிகளுக்கு வசப்பட்டு செய்யாதே பெருந்தவறை
உயிர்காக்கும் தொழிலுக்கு மரியாதை வழங்கிடு
உண்மையிலேயே தவிறிருந்தால் நீதிகேட்டு வழக்கிடு
ஊரே போற்றிடும் உன்னத தொழில்
ஊக்கத்துடன் செய்திட பெற்றிடும் எழில்
ஊமையும் குருடனும் மறுவாழ்வு பெறுவதுண்டு
ஊழையும் வென்று உயிரைத் தருவதுமுண்டு
எத்தனையோ சாதித்தாலும் பணிவு உண்டு
எமனையே எதிர்க்கின்ற துணிவு உண்டு
என்றும் நிலைத்திடும் நல்ல மருத்துவம்
என்றுமே அழியாது அதன் மகத்துவம்
ஏமாற்றம் தாராத துறையும் உண்டோ?
ஏளனப் படுத்துவதில் நியாயம் உண்டோ?
ஏற்றமும் இரக்கமும் இயற்கை தானே
ஏன் இறங்குகிறாய் வன்முறையில் வீணே
ஐயமில்லை என்பதில்லை என்றும் மருத்துவத்தில்
ஐக்கியம் ஆகிவிடு அதன் தத்துவத்தில்
ஐந்து விரலால் எழுதப்படும் மருந்து
ஐயமில்லை தலைவிதியாய் விளங்கும் சிறந்து
ஒட்டி பிறக்கும் குழந்தைகளைப் பிரிப்பதுண்டு
ஒருசில சமயத்தில் குழந்தை இறப்பதுண்டு
ஒருமருந்தும் அமிர்தம் கிடையாது மனிதனே
ஒத்துக்கொள்ள வேண்டுமே மருத்துவனும் மனிதனே
ஓதுவது மட்டும்தான் ஐயரின் வேலை
ஓருயிரை காப்பாற்றுவதோ இறைவனின் லீலை
ஓர் இறைவனாய் மருத்துவரைப் பார்க்காதே!
ஓருயிர் பிரிந்தால் மருத்துவரைத் தாக்காதே!!
Saturday, 21 January 2012
thinga thikku mukkaada udalil koluppu thanga adharku thaga....
திங்க திக்குமுக்காட உடலில் கொழுப்பு
தங்க அதற்குத் தக... இப்படியா உண்பது.... இல்லை .... இது சிரிக்க மட்டும்தான் செரிக்க அல்ல...
உணவே மருந்து
வாய்வழி போகின்ற முக்கிய பொருள்
ஆறுமாதம் முடியும்வரை தாய்ப்பால் மட்டும்
வேறுசாதம் அதன்பின் சேர்த்தால் ஒட்டும்
செரிக்கப்பட்டு வயிற்றில் சிறிதாகும் உணவு
எரிக்கப்பட்டு சக்தியாய் உடலுக்காகும் வரவு
அளவான உணவை அமிர்தமென அருந்து
அளவாக உண்டால் அதுவே மருந்து
இரத்தக் கொதிப்பை சீராக வைத்திடு
நித்தம் உப்பை உணவினில் குறைத்திடு
அலுப்புடன் இருக்கும் உடலினைத் தவிர்த்திடு
கொழுப்புடன் இருக்கும் உணவினைக் குறைத்திடு
எளிதாக செரியும் உணவினை உண்க
தெளிவாக தெரியும் பலன்களை காண்க
பார்வை நன்கு தெரிய வைக்கும்
சோர்வை நீக்கி தெளிய வைக்கும்
உள்ளம் அமைதி பெற மனப்யிற்சி
உணவு செரிமானம் பெற உடற்பயிற்சி
உணவுடன் செய்திடு அதையும் சேர்த்து
உலகையே மயக்கிடு கட்டுடலால் ஈர்த்து
உயிர் வாழ்வதற்கு உண்பது நன்று
உயிர் வாழ்வதே உண்பதற்கு அன்று
மதுவும் ஓருணவே எனினும் அஞ்சு
அதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு
செல்வது உள்ளே எந்தளவு முக்கியம்
செல்வது வெளியே அதேயளவு முக்கியம்
ஒருநாளும் கழியாதே காலைக்கடன் அடைக்காமல்
ஒருநாளும் உண்ணாதே கழிவுகளை அகற்றாமல்
பசிக்காக புசித்தால் உடலில் தங்கும்
ருசிக்காக புசித்தால் உடல்நிலை மங்கும்
நேசித்து உண்ணப்படும் உணவு விருந்தாகும்
யோசித்து உண்ணப்படும் உணவே மருந்தாகும்
யோசிப்பதும் நேசிப்பதும் உன் விருப்பம்
வாசிப்பதும் எழுதுவதும் என் விருப்பம்
எழுதிவிட்டேன் எனக்கு தெரிந்த உண்மை
பழுதுநீக்கி உண்டால் உனக்கு நன்மை
அளவான நல்ல உணவே மருந்தாகும்
வளமான நல்ல வாழ்வுக்கு வழியாகும்.
உணவே மருந்தென உணர்ந்து விடு!
உடலையும் மனதையும் வென்று விடு!!
Friday, 20 January 2012
Subscribe to:
Posts (Atom)




